;
Athirady Tamil News

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து தொல்லை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்!!

0

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹப்சிகுடாவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது உறவினரான ராமன்தாபூரை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி நாராயணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருப்பினும் தன்னை காதலிக்குமாறு இளம் பெண்ணிற்கு லட்சுமி நாராயணன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து இளம் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இளம்பெண்ணின் பெற்றோர் லட்சுமி நாராயணனை கண்டித்தனர். மேலும் அவரது மனைவியிடமும் தெரிவித்தனர்.

இதனால் லட்சுமி நாராயணன் இளம்பெண் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலை இளம்பெண் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு காரில் வந்த லட்சுமி நாராயணன் இளம்பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என காரில் ஏற்றிக்கொண்டார். பின்னர் ஐதராபாத் நகர மையப்பகுதியான உப்பல் பகாயத் ஹச். எம்.டி.ஏ லேஅவுட்க்கு அழைத்துச் சென்றார். அப்போது இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார். இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. அவர் வலியால் அலறி துடித்தார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்ட லட்சுமி நாராயணன் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உப்பல் பகாயத் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி நாராயணனை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.