;
Athirady Tamil News

ஒரே நாளில் கோடீஸ்வரரான சீன தொழிலாளி – அப்படி என்ன செய்தார் தெரியுமா… !

0

சீனாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்ததிகதிகளை பயன்படுத்தி வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டுகளுக்கு 90 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது.

கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சூவில் வசித்து வருகிறார் அந்த அதிர்ஷ்டசாலியான வூ.

இந்த மாத தொடக்கத்தில், எப்போதும் போல் கடைக்குச் சென்று 12 அதிஷ்ட இலாப சீட்டுக்களை வாங்கியுள்ளார் அவர். தனது குடும்ப உறுப்பினர்களின் பிறந்த திகதி அடங்கிய எண்களை பார்த்து இவர் அதிஷ்ட இலாப சீட்டை வாங்கியுள்ளார்.

ஜூலை 11-ம் திகதி பரிசுத் தொகைக்கான குலுக்கல் நடைபெற்றுள்ளது. இவருக்கு பரிசுத் தொகையாக எவ்வளவு கிடைத்தது என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த அறிவிப்பின்படி, தனது ஒவ்வொரு அதிஷ்ட இலாப சீட்டுக்கும் முதல் பரிசான 5.14 மில்லியன் யுவான் (ரூ. 5 கோடிக்கு மேல்) வென்றதாக வூ கண்டுபிடித்தார்.

இதன் பொருள் மொத்தம் 77.1 மில்லியன் யுவான் (ரூ. 88 கோடி) ஜீஜியாங் மாகாணத்தில் இதற்கு முன் இவ்வளவு பெரிய தொகையை யாரும் வென்றதில்லை. இவ்வளவு பெரிய பரிசுத் தொகை கிடைத்ததற்கு என் மனைவியும் குழந்தைகளும்தான் காரணம் என மகிழ்ச்சியோடு கூறுகிறார் வூ.

You might also like

Leave A Reply

Your email address will not be published.