;
Athirady Tamil News

விரைவில் நிரந்தர நியமனம்!!

0

உள்ளாட்சி நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.

தற்போது cள்ளாட்சி அமைப்புகளில் 12,000 வெற்றிடங்கள் இருக்கின்றன. அவ் வெற்றிடங்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதியும் விரைவில் பெறப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.