;
Athirady Tamil News

Fwd: கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது!!

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சீமெந்து தொழிற்சாலைக்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்டு இருந்த குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய அண்மையில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.