;
Athirady Tamil News

ஈக்வடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை!!

0

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வருகிற 20-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஈக்வடாரில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவின் குடிமக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த தலைவரான பெட்ரோ பிரையோன்ஸ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர் சான்மேடியோ நகரில் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.