;
Athirady Tamil News

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD கம்பனிக்கு கடிதம்.!! (PHOTOS, VIDEOS)

0

17.07.2023 திகதியிடப்பட்டு அன்னை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி அதிர்வலைகளினால் கிராமமக்கள் அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். மின்னுற்பத்திதிட்ட முகாமையாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழி கடிதத்திற்கு எதிரான செயற்திட்டங்களை செய்துள்ளார்கள். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தரவில்லை என்பதனை குறிப்பிட்டு அரசாங்க அதிபர் அவர்கட்கு மக்கள் கடிதம் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD காற்றாலை மின் உற்பத்தி கம்பனிக்கு கடிதம், குறித்த கடிதத்தில் தெருவித்திருப்பதாவது…

தங்கள் Hiruras Power Private LTD கம்பனியினால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 15MW WIND POWER PROJECT காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் நானாட்டானைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறிப்பாக நறுவிலிக்குளம் மற்றும் அதனை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்பதை தெருவித்துக்கொள்கின்றேன். காற்றாலைகளினால் உருவாகும் ஒலியை குறித்த பகுதிமக்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதை அவதானிக்க முடிந்தது. ஒலி பிரச்சனையால் சில குடும்பங்கள் அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என திட்டக்குழு உறுதியளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாகும். ஆனால் உண்மையில் காற்றாலை விசையாழிகளால் உருவாகும் ஒலியே இப்போது அந்தப் பகுதியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

எனவே இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் சவுண்ட் ஃப்ளிக்கர் [SOUND FLICKER] சோதனை செய்து இந்த ஒலியைக் குறைப்பதற்கும் தேவையற்ற தொந்தரவுகள் இல்லாமல் மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ பொருத்தமான தொழில்நுட்ப தீர்வைக் கண்டறியவும். என மன்னார் மாவட்ட செயலாரினால் குறித்த Hiruras Power Private LTD கப்பனிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாவட்ட செயலாளரினைல் குறித்த Hiruras Power Private LTD கம்பனிக்கு அனுப்பட்ட கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.

17.07.2023 திகதியிடப்பட்டு அன்னை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி அதிர்வலைகளினால் கிராமமக்கள் அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். மின்னுற்பத்திதிட்ட முகாமையாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழி கடிதத்திற்கு எதிரான செயற்திட்டங்களை செய்துள்ளார்கள். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தரவில்லை என்பதனை குறிப்பிட்டு அரசாங்க அதிபர் அவர்கட்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய பதிவு
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும் நிறுவப்பட்டுள்ள காற்றாலை உற்பத்திக்கு 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] மக்கள் ஆரம்பத்திலிருந்து தமது எதிர்பினை தெருவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 15MW WIND POWER PROJECT கொண்ட நிலையத்தினை மக்கள் குடியிருப்புக்கள் அற்ற இடத்தில் மேற்கொள்ளுமாறு பல அரச அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தியும் அவ் உரிய அதிகாரிகள் கவனம் எடுக்காத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது.

06.08.2023 அமைச்சர் காஞ்சன விஜெயசேகர அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை முக்கியமானவிடயமாகும்.

மக்கள் தமது பிரச்சனைகளை பிரதேச செயலாளர் முதல் அரசாங்க அதிபர் வரை தெரியப்படுத்தியும் ஏன் இதனை தவிர்க்க முடியவில்லை என்ற தமது ஆதங்களை கவனயீர்பு ஆர்பாட்டத்தின் மூலம் நேற்று தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடவேண்டியது.

மன்னார் மாவட்டமானது ஆளுமையற்ற அரச உயர் அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டதாகவும் மக்களை விழிப்பூட்டுவதற்கும் சரியான இடங்களில் முதலீடுகளை நிறுவுவதற்கான தெளிவுகளை வழங்கமுடியாத திணைக்கள தலைவர்களை கொண்ட மாவட்ட மாகாக் காணப்படுகின்றமையும், வன்னி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் அசமந்த போக்கு ஏனைய மாவட்டங்களை விட அதிகமாகவும் மக்களினை தொடர்ச்சியாக பிரச்சனைகளுக்குள் சிக்கித்தவிர்க்கும் சூழலினையினையே தோற்றிவிப்பதாகக் காணப்பவதாக மக்கள் தெருவித்தார்கள்.

பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் ஏன் பதில் அளிக்க மறுக்கின்றனர் என்பதும் மக்களது வாதமாகக் காணப்படுகின்றமையும் மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாரிய முதலீடுகள் தொடர்பாக எவ்விதமான அறிவுகள் அற்ற நிலையில் செயற்படுகின்றார்களா? அபிவிருத்திக் குழுகூட்டத்திற்கு செலவழிக்கப்படும் மக்களது வரிப்பணங்கள் வீணாக்கப்படுகின்றனவா? உண்மையில் மன்னார் மாவட்டத்தில் நடப்பவை என்ன? மிக குறுகிய சனத்தொகையினை கொண்ட மாவட்டத்தின் அரச அதிகாரிகள் ஏன் பதிலளிக்க மறுக்கின்றனர்? என சாதாரண மக்கள் சிந்திக்கும் நிலை காணப்படுகின்றது.

முதலீடுகளை சரியாக பிரதேசத்தில் மேற்கொள்வதால் முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் எதிர்ப்புக்கள் ஏற்படுவதனையும் வீண் செலவுகள் மற்றும் ஊழல் – சுரண்டல்களை தவிர்க்க முடியும்.

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.