;
Athirady Tamil News

தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம் !!

0

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் இன்றைய தினம் (19.08.2023) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தெரியவருவதாவது ,

உயிரிழந்த மாணவன் கணிதப்பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலையில் அகில இலங்கை ரீதியில் 81வது நிலையைப்பெற்று மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மெரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணிதப்பிரிவில் பட்டப்படிப்பைத் தொடர்ந்துவந்த மாணவராவார்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.