;
Athirady Tamil News

வீடு புகுந்து அண்ணன் முன்பே சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்- 8 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

0

தெலுங்கானா மாநிலம், ரங்கப்பேட்டை மாவட்டம், மீர் பேட்டையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு 18 வயதில் அண்ணன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை அவரது தாயை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார் இதனால் மனம் உடைந்த சிறுமியின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமி மற்றும் அவரது சகோதரர் ஆதரவு இன்றி தவித்து வந்தனர். சிறுமியின் சகோதரர் கூலி வேலைக்கு சென்று சிறுமியை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் பெற்றோர்கள் குடியிருந்த வீட்டிற்கு வாடகை அதிகம் என்பதால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீர்பேட்டை, நந்தவன பகுதியில் உள்ள சிறிய வீட்டிற்கு இருவரும் குடியேறினர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 8 பேர் கொண்ட கும்பல் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியையும் அவரது சகோதரரையும் தட்டி எழுப்பினர். அவர்கள் சிறுமியின் அண்ணனை தாக்கினர். தங்களிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரை வீட்டின் ஓரத்தில் அமர வைத்தனர். அண்ணன் எதிரிலேயே சிறுமியை 8 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். பின்னர் இது குறித்து யாரிடமாவது கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

சிறுமியை 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று காலை சிறுமியை அவரது சகோதரர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து டாக்டர்களிடம் தெரிவித்தார். டாக்டர்கள் ரச்சகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கும்பலை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.