;
Athirady Tamil News

மலை ஏற்றத்தில் சாதனை படைக்கும் சிறுமி!!

0

விளையாட்டுகளில் சாதனை படைக்கும் சிறுவர்- சிறுமிகளுக்கு மத்தியில் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக மற்ற துறைகளிலும் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் சூத் என்பவரது மகள் சான்வி மலை ஏற்றத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். இவர் சமீபத்தில் ரஷியாவில் எல்பரஸ் சிகரத்தில் ஏறி, இளம் வயதில் இந்த சிகரத்தில் ஏறிய சிறுமி என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த சிறுமி ஏற்கனவே கடந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இருந்தார். அதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம் சிறுமி என்ற சாதனையை படைத்திருந்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருந்தார். தொடர்ந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் 2,228 மீட்டர் உயரம் உள்ள கோஸ்சியூஸ்கோ மலை சிகரத்தை ஏறி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.