;
Athirady Tamil News

வடகொரிய அதிபர் மீது கொலை முயற்சி – தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்புகள் !!

0

வடகொரியா பலநாடுகளுடன் முரண்பட்டுக்கொண்டு வருகின்ற நிலையில், அந்நாட்டின் அதிபர் கிம்ஜோங் உன்னை கொலை செய்யும் முயற்சி ஒன்று அரங்கேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினையும் மீறி அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், அண்மையில் வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கிம்மை கொலை செய்யும் முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து கிம்முக்கான பாதுகாப்பு பலப்பட்டுள்ளதாகவும் இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.