;
Athirady Tamil News

டெல்லி மெட்ரோவை தொடர்ந்து அரசு பஸ்சில் இருக்கைக்காக சண்டை போட்ட பெண்கள்!!

0

டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக பயணிகள் இடையே நடைபெற்ற வாக்குவாதம், மோதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

இந்நிலையில் தற்போது டெல்லி அரசு பஸ்சிலும் இருக்கைக்காக பெண் பயணிகள் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. டுவிட்டரில் வெளியான அந்த வீடியோ ‘டெல்லி அரசு பஸ்சில் இருக்கை பிரச்சனையில் இரு பெண்களுக்கிடையே சண்டை’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. அதில், பெண் பயணி ஒருவர் மற்றொரு பெண் பயணியின் மடியில் அமர்ந்து இருக்கைக்காக சண்டையிடுவதை காண முடிகிறது.

இதைப்பார்த்த சக பயணி ஒருவர் அவர்களை தடுக்க முயன்ற போது இருவரும் அதை கண்டுகொள்ளாமல் ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுப்பதும், முகத்தை கீறிக்கொள்ள முயற்சிப்பதுமான காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், இந்த வீடியோவின் ஒளிப்பதிவாளர் விருதுக்கு தகுதியானவர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மற்றொரு பயனர், தண்ணீர் குழாயில் சண்டையிடும் பழைய திறன்கள் எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கும் என கேலி செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.