;
Athirady Tamil News

சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

0

சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.