;
Athirady Tamil News

சந்திரயான்3 வெற்றிக்கு முக்கிய காரணமான மசாலா தோசை,காபி !!

0

சந்திரயான் 3 வெற்றிக்கு மசாலா தோசை மற்றும் காபி முக்கிய இடம்பிடித்துள்ளதாக அந்த திட்டத்தில் இணைந்திருந்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவான சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இந்த வெற்றிக்கு மசாலா தோசைக்கும், காபிக்கும் முக்கிய பங்கு உண்டு என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக சந்திரயான் திட்டத்தில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா கூறுகையில்,

‘எங்களுக்கு மாலை 5 மணிக்கு மசாலா தோசையும், பில்டர் காபியும் இலவசமாக தருவார்கள். இது எங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இன்னும் சில மணி நேரம் கூடுதலாக உழைப்பதற்கு உதவும். அதன் மூலம் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்றினோம்’ என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.