;
Athirady Tamil News

மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை – காங்கிரஸ் திட்டம்!!

0

இந்தியா முழுக்க மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை நாடு முழுக்க துவங்கி இருந்தார். இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் முதலாம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க மாவட்டம் தோறும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்த முடிவு எடுத்து இருக்கிறது. இந்த யாத்திரையின் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமாரியில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார்.

145 நாட்கள் நீடித்த பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். யாத்திரையின் போது ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். இதுதவிர நூற்றுக்கும் அதிக கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்டவைகளில் கலந்து கொண்டார். சுமார் 275-க்கும் அதிக உரையாடல்களை நடந்து கொண்டே மேற்கொள்ளவும், 100-க்கும் அதிக உரையாடல்களை உட்கார்ந்த படி மேற்கொள்ளவும் திட்டமிட்டுருந்தார்.

அரசியல்வாதிகள், பொதுகமக்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர், முன்னாள் வான்படை தலைவர் ராமதாஸ், முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ரகுராம் ராஜன், எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பலர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.