;
Athirady Tamil News

இந்தியாவில் தொடரும் சர்ச்சை பெயர்மாற்றம் இடம்பெறுமா..! !

0

இந்தியா எனும் பெயருக்குப் பதிலாக பாரதம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்திய அதிபர் மற்றும் பிரதமர் வெளியிட்ட பல கடிதங்களால் இந்தியாவில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்தியாவில் விரைவில் தொடங்கவிருக்கும் ஜீ20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை அனுப்பும்போது, அந்த நாட்டின் அதிபரான திரௌபதி முர்மு, பாரத அதிபர் என வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அதிகாரப்பூர்வ விழாவிற்கு இந்தியா என்பதற்குப் பதிலாக பாரதம் என்ற சொல் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவுக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தை அறிவித்து வெளியிட்ட குறிப்பில், இது பாரத பிரதமரின் இந்தோனேசியப் பயணமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் கட்டுரையிலும் பாரதம் என்ற வார்த்தையே காணப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத்தின் விசேட அமர்வின் போது, ​​நாட்டின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான வரைவு குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.