போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை; ஜனாதிபதி அநுரகுமார
பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “தேசமே ஒன்றிணைந்த” தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தில்,இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டின் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.