;
Athirady Tamil News

மொட்டுட்டுடன் கைகோர்க்கப் போவதில்லை!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறினார்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைப்பது மற்றும் மாவட்ட தொகுதி மட்டத்தில் அமைப்புச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக மேலும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.