;
Athirady Tamil News

விவாகரத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு நேர்ந்த கதி!

0

விவாகரத்து வழக்கில் அதிருப்தி அடைந்து அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் எனும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயதுடைய நீதிபதி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மேரிலேண்ட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் 49 வயது பெட்ரோ அர்கோட்டேயிடம் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபரின் விவாகரத்து வழக்கில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமை அவரது மனைவிக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்து அவர் நீதிபதியைச் சுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.