;
Athirady Tamil News

வட்டவளைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஆடையுடனான லொறி

0

குருநாகலிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி ஒன்று வட்டவளை பாடசாலைக்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடை விற்பனைக்காக ஹட்டன் நோக்கி பயணித்த லொறி இன்றைய தினம் (07.11.2023) இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.