;
Athirady Tamil News

நேற்று நியமனம் பெற்ற அர்ஜுன ரணதுங்க இன்று வெளியேறினார்!

0

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க நேற்று நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் , நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழைமை (07) பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சரினால் நேற்று (06) நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.