;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தருக்கு வெளிநாடொன்றில் நேர்ந்த சோக சம்பவம்!

0

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி செம்பியன்பற்று தெற்கைச் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த குடும்பஸ்தர் டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு தீப்பற்றி படுகாயம் அடைந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமத்திப்பட்டு சிகிறசை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை(02) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.