;
Athirady Tamil News

அம்பாரை மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்றார் எம்.ஏ.எம்.றாபி

0

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம்.றாபி (SLTS– Special Class) நாளை திங்கட்கிழமை முதல் (13-11-2023) தனது 30 வருடகால காணி உத்தியோகத்தர் சேவையில் இருந்து தலைமைத்துவ காணி உத்தியோகத்தராக அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார்.

இவர் 1993.08.02 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று அதன் பின்னர் காத்தான்குடி , நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, திருகோணமலை, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றி பின்னர் 2023.11.13 ஆந் திகதி முதல் தலைமை காணி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று அம்பாரை மாவட்ட செயலகத்தில் கடமையேற்கவுள்ளார்.

உத்தியோகத்தரின் பதவி உயர்வு கடிதம் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா தலைமையில் (10) அன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புடைசூல நடைபெற்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.