;
Athirady Tamil News

ரணிலின் திட்டத்திற்கு ஐஎம்எப் இன் பதில் என்ன… காத்திருக்கும் இலங்கை

0

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கமைய வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியளாலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தலா தேசிய வருமானம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த வருடத்தின் முதல் காலாண்டு இலங்கைக்கு கடினமான காலமாக அமையும். எனினும், அதனை தொடர்ந்து இலங்கையின் நிலை மேம்படும்.

இலங்கையின் தலா தேசிய வருமானம் கடந்த 2018 ஆம் ஆண்டு 94.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. எனினும், கடந்த ஆண்டு அது 77 பில்லியனுக்கு இறங்கியிருந்தது.

இதனை இந்த ஆண்டில் 85 பில்லியான அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவற்றை தொடர்ந்து அடுத்த தல தேசிய வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 ஆம் ஆண்டே ஆரம்பமாகும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.