;
Athirady Tamil News

தெற்கு காசாவிலும் நுழைய தயாராகும் இஸ்ரேல் இராணுவம்

0

காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 6ஆவது வாரத்தின் இறுதியை எட்டியுள்ள நிலையில் போரில் இரு தரப்பிலும் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதுவரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் இராணுவம் அடுத்ததாக தெற்கை குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக தெற்கு காசா நகர வீதிகளில் இஸ்ரேல் இராணுவம் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருகிறது.

விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அதில், பயங்கரவாதிகளின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் அல்லது அவர்களுடன் காணப்படும் மக்களின் உயிர் அபாயத்தில் தள்ளப்படும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தெற்கு நோக்கிய பயணம் குறித்து இஸ்ரேலிய இராணுவ தலைவரும் சூசகமாக தெரிவித்து இருந்தார். வடக்கு, தெற்கு என ஹமாஸ் அமைப்பினர் எங்கே இருந்தாலும் அவர்கள் மீது தாக்குவோம் என அவர் கூறியிருந்தார்.

தற்போது தெற்கிலும் இராணுவம் நுழையும் திட்டம் அவர்களுக்கு மேலும் பீதியை அளித்து இருக்கிறது. தெற்கு காசாவில் இஸ்ரேல் ஏற்கனவே வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கே எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது தரைவழி தாக்குதலும் தொடங்கினால் அந்த மக்களின் நிலைமை மேலும் மோசமாகும் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.