;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்யோகத்தரின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0

மன்னார் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி உத்யோகத்தராக பணியாற்றி வந்த வேளை கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் திகதி அகால மரணமடைந்த சீனித்தம்பி சுதர்சனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்று அவரின் நன்பர்களினால் உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது சிறப்புக் கலைமானிப் பட்டத்தினை நிறைவு செய்த சுதர்சனின், பேராதனைப் பல்கலைக் கழக நண்பர்களின் நட்புக்கூட்டிணைப்பினால் (Batchmates, Seniors, Uniors) இந்த உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கியதுடன் கடந்த 15ஆம் திகதி , சுதர்சன் கல்வி கற்ற பாடசாலையான யாழ். தேவரையாளி இந்துக் கல்லூரியில் 50 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்களும், பாடசாலை நூலகத்திற்கு முக்கியமான நூல்களும் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.