;
Athirady Tamil News

வடக்கு கிழக்கில் மழை நீடிக்கும்

0

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கில் மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

வட கிழக்கில் சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 21வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது. இம் மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும்.

முல்லைத்தீவுக்கு தெற்காக சனிக்கிழமை காலை 7 மணியளவில் காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 21ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.