;
Athirady Tamil News

முள்ளியவளையில் போதைப் பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

0

முள்ளியவளை – கணுக்கேணி பகுதியில் பெருமளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(18.11.2023) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருட்களை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்கள்.

குறித்த இடத்திலிருந்து சிறு சிறு பொதி செய்யப்பட்ட வகையில் 4 கட்டு ஹெரோயினுடன் (10 மில்லி கிராம்), 4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருட்கள் முள்ளியவளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.