;
Athirady Tamil News

அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில்…இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைத்த கும்பல்

0

இந்தியாவின் பிகாரில் இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

துப்பாக்கி முனையில் திருமணம்
இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த கெளரம் குமார் என்ற இளைஞர் அரசு பணியாளர்கள் ஆணைய தேர்வில் தேர்ச்சி பெற்று சமீபத்தில் ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கெளரம் குமார் ஆசிரியர் பணி நியமன ஆணையை பெற்ற 24 மணி நேரத்தில் அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று தந்தை ஒருவர் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

பீகாரில் அவ்வப்போது வேலை உள்ள இளைஞர்களை கடத்தி சட்ட விரோதமாக கட்டாய திருமணம் செய்து வைக்கும் பகட்வா விவாஹா என்ற சம்பவங்கள் நிகழ்கிறது.

அரசு வேலை பெற்ற இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்தி மகளுக்கு திருமணம் செய்து வைத்தவர் செங்கல் சூளை அதிபர் என்பது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.