;
Athirady Tamil News

ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11பேர் பலி

0

ஈராக்கின் டியாலா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டியாலா மாகாணத்தில் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கடந்த வியாழக்கிழமை (30) வெடிக்கச் செய்யப்பட்டது.

இதன்போது காயமடைந்தவா்களை மீட்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடினர்.

பொதுமக்கள் உயிரிழப்பு
அப்போது அவா்களை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில்11 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய பங்கரவாதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டியாலா பிராந்தியத்தில் ஏற்கெனவே பல முறை தாக்குதல் நடத்தியுள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பே இந்த துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.