;
Athirady Tamil News

மாங்குளம் காவல் நிலையத்தில் பெருமளவு தோட்டாக்கள் மாயம்

0

மாங்குளம் காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த 12 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதியின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

சல்லடை போட்டு தேடுதல்
காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி அதனை சூழவுள்ள பகுதியை முழுமையாக சோதனையிட்ட போதும் வெடிமருந்துகள் கையிருப்பு கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எப்படி காணாமல் போனது
இந்த தோட்டாக்கள் எப்படி காணாமல் போனது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என காவல்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவை கடமையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தரால் திருடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.