;
Athirady Tamil News

ஒதியமலை படுகொலை நினைவேந்தலில் குழப்பம் விளைவித்த பொலிஸார்!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று (02) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது திடீரென அங்கு நுழைந்த பொலிஸாரால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திடீரென நுழைந்த பொலிஸார்
ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் , ஒதியமலைப் படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (02) படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

நிகழ்வுகள் இன்று(02) நண்பர்கள் 12 மணிக்கு ஆரம்பமாகி நிகழ்வு அமைதியாக முறையிலேயே இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நுழைந்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதி பத்திரம் பெறவில்லை என தெரிவித்து நிகழ்வில் குழப்பத்தை விளைவித்திருந்தனர்.

அத்துடன் ஒலிபெருக்கிக்கான அனுமதிப் பத்திரத்தை காண்பிக்குமாறும் நிகழ்வை நிறுத்துமாறும் கூறியதை அடுத்து அங்கு பாரிய குழப்பநிலை ஏற்ப்பட்டது

இந்நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நிகழ்வில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும் நோக்கோடு திட்டமிட்டு செயற்பட்டதாக அங்கிருந்த மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.