;
Athirady Tamil News

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கெதிரான சுவிஸ் அரசாங்கத்தின் திட்டம்!

0

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கெதிரான திட்டம் சுவிஸ் அரசாங்கம், பிரித்தானியா உள்ளிட்ட மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஆண்டொன்றிற்கு 12,000 பணி உரிமங்கள் மட்டுமே வழங்குவது என வரம்பு வைத்துள்ளது.

இந்நிலையில், அதையும் குறைத்து 9,600 ஆக ஆக்க விரும்புவதாக சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Elisabeth Baume-Schneider தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள்
“சில குறிப்பிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் சுவிட்சர்லாந்திலும் இல்லை, ஐரோப்பிய ஒன்றியத்திலும் இல்லை.

ஆனாலும், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணி உரிமங்களின் எண்ணிக்கையைக் குறைக்க சுவிஸ் அரசு திட்டமிட்டது.

ஆனால், சுவிஸ் அரசின் திட்டத்துக்கு மாகாணங்களும், தொழிலதிபர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, பெடரல் கவுன்சில் தன் திட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டது.

அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தைச் சேராத மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணி அனுமதிகளின் எண்ணிக்கையில் அடுத்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என சுவிஸ் அரசு தற்போது முடிவு செய்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.