;
Athirady Tamil News

யாழில் கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

0

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ளதால் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த போராட்டமானது, பொன்னாலை சந்தியில் நாளையதினம் (10.12.2023) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடற்றொழிலாளர்கள் போராட்டம்
இந்த போராட்டத்தினை கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போராட்டத்திற்கு பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.