;
Athirady Tamil News

ஜனவரி முதல் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

0

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அமைச்சர் இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய மின்சாரச் சட்டமூலம்
இதன்படி, புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 12ஆம் அல்லது 13ஆம் திகதிகளில் உரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.