;
Athirady Tamil News

அடுத்தடுத்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் சொகுசு கப்பல்

0

4 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த 3 கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்.எஸ். செவன் சீஸ் நேவிகேட்டர்
வாஸ்கோடகமா சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும், மெயின் ஷிஃப் 5 என்ற சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும் இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளன.

இந்நிலையில் எம்.எஸ். செவன் சீஸ் நேவிகேட்டர் என்ற சொகுசு ரக கப்பல் இன்று(10) மதியம் 1.30க்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.