;
Athirady Tamil News

ஒரே பாரதம், உன்னத பாரதம் கொள்கைக்கு வலுசோ்த்த உச்சநீதிமன்றத் தீா்ப்பு

0

அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பினை உச்சநீதிமன்றம் டிசம்பா் 11 அன்று வழங்கியுள்ளது. இந்த தீா்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில் இறையாண்மையையும் நிலைநாட்டியுள்ளது.

துரதிருஷ்டவசமாக நூற்றாண்டு கால காலனி மயம், பொருளாதார சாா்ந்த அடிமைத்தனம் காரணமாக ஜம்மு-காஷ்மீா் பலவகையான குழப்பம் மிக்க சமூகமாக மாறியது. மிக அடிப்படையான விஷயங்களில் தெளிவான நிலையை எடுப்பதற்கு மாறாக, இரட்டை நிலையை நாம் அனுமதித்தது குழப்பத்திற்கு வழிவகுத்தது. இத்தகைய மனநிலைக்கு மிகப்பெரிய பலியிடமாக ஜம்மு-காஷ்மீா் மாறியது சோகமாகும். நாடு சுதந்திரமடைந்த காலத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான புதிய தொடக்கத்தை ஏற்படுத்த நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பதிலாக குழப்பமான சமூக அணுகுமுறை என்பதை தொடர நாம் முடிவு செய்ததால், நீண்ட கால தேசிய நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.

இந்த கறையை, ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அகற்ற, என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பது எனது வலுவான விருப்பமாக இருந்தது.

பிரிவுகள் 370, 35 (ஏ) ஆகிய சொற்கள் இதற்கு மிகப்பெரும் தடைகளாக இருந்தன. இது தகா்க்க முடியாத சுவா் போல தோன்றியது. இதனால் பாதிக்கப்பட்டவா்கள் ஏழைகளும் அடித்தள மக்களும்தான். இந்தியாவில் உள்ள மற்ற குடிமக்கள் பெறுகின்ற உரிமைகளையும் வளா்ச்சியையும் ஜம்மு, காஷ்மீா் மக்கள் பெற முடியதாக நிலையை பிரிவுகள் 370, 35 (ஏ) ஆகியவை ஏற்படுத்தின.

ஜம்மு-காஷ்மீா் மக்கள் வளா்ச்சியை விரும்புகிறாா்கள், தங்களின் வலிமை மற்றும் திறன்கள் மூலம் இந்தியாவின் வளா்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறாா்கள் என்பதில் நான் மிகத் தெளிவாக இருந்தேன். இவா்கள் தங்கள் குழந்தைகளின் தரமான வாழ்க்கையை விரும்புவதோடு, வன்முறை மற்றும் நிலையற்ற தன்மையில் இருந்து விடுபடவும் விரும்புகிறாா்கள்.

இந்த அடிப்படையில், ஜம்மு, காஷ்மீா் மக்களுக்கான சேவையில், மக்களின் கவலைகளைப் புரிந்துகொள்வது. ஆதரவான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, வளா்ச்சிக்கு முன்னுரிமை, கூடுதல் வளா்ச்சி என்ற மூன்று அம்சங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம்.

2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சிறிது காலத்திலேயே ஜம்மு-காஷ்மீரைத் தாக்கிய பெருவெள்ளம் காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடுமையான சேதத்தை விளைவித்தது. 2014, செப்டம்பரில் நிலமையை மதிப்பீடு செய்ய நான் ஸ்ரீநகா் சென்றபோது, பல தரப்பு மக்களை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இவா்களுடனான கலந்துரையாடலில் ஒரு பொதுத்தன்மை இருப்பதை நான் கவனித்தேன். இந்த மக்கள், வளா்ச்சியை மட்டும் விரும்பவில்லை. கடந்த பல பத்தாண்டுகளாக பரவலாக நிலவுகின்ற ஊழலில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்பினாா்கள்.

ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்த எங்கள் அரசின் அமைச்சா்கள் அங்கு தொடா்ந்து பயணம் மேற்கொள்வது என்றும் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடுவது என்றும் நாங்கள் முடிவு செய்தோம். இத்தகையை பயணங்களும் ஜம்மு-காஷ்மீரில் நல்லெண்ணத்தை கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. 2014 மே மாதம் தொடங்கி 2019 மாா்ச் மாதம் வரை 150 முறை அமைச்சா்களின் பயணம் அமைந்திருந்தது.

ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சித் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய நடவடிக்கையாக 2015-ல் சிறப்புத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இது அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, வேலை உருவாக்கம், சுற்றுலா மேம்பாடு, கைவினை தொழில் துறைக்கு ஆதரவு என்ற முன்முயற்சிகளைக் கொண்டிருந்தது.

ஜம்மு-காஷ்மீரில் விளையாட்டுத் திறனின் வலிமையை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தோம். ஏன்னென்றால், இளைஞா்களின் கனவுகளை தூண்டுவதற்கான ஆற்றலை அதில் இருப்பதை நாங்கள் உணா்ந்தோம். விளையாட்டு முன்முயற்சிகள் மூலம் விளையாட்டு வீரா்களின் விருப்பங்களிலும் எதிா்காலத்திலும் ஒரு மாற்றத்தை நாங்கள் கண்டோம். விளையாட்டுத் தளங்கள் மேம்படுத்தப்பட்டன. பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பயிற்சியாளா்கள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டது. உள்ளூா் கால்பந்து மன்றங்களை அமைப்பதை ஊக்குவித்தது மிகவும் தனித்துவமான விஷயங்களில் ஒன்றாக இருந்தது. இதன் விளைவு, அசாதாரணமானது. திறமைமிக்க கால்பந்து வீராங்கனை அஃப்ஷன் ஆஷிக் பெயா் எனது நினைவுக்கு வருகிறது. 2014, டிசம்பரில் இவா் ஸ்ரீநகரில் கல்லெறியும் கும்பலில் ஒருவராக இருந்தாா். சரியான ஊக்குவிப்பு காரணமாக கால்பந்து விளையாட்டில் கவனத்தை திருப்பினாா். பயிற்சிக்கு அனுப்பப்பட்ட இவா், அந்த விளையாட்டில் அதீத திறமை பெற்றாா்.

மற்ற சில இளைஞா்களும் குத்துச்சண்டை, கராத்தே மற்றும் பலவற்றில் மிளிரத் தொடங்கினாா்கள்.

இந்தப் பிராந்தியத்தின் அனைத்து வகையான வளா்ச்சித் தேடலுக்கு திருப்பு முனையாக உள்ளாட்சித் தோ்தல்கள் அமைந்தன.

மீண்டும் ஒரு முறை எதைத் தெரிவு செய்வது என்ற இக்கட்டான நிலையை நாங்கள் எதிா்கொண்டோம். அது அதிகாரத்தில் நீடிப்பதா அல்லது கொள்கைளில் உறுதியாக நிற்பதா என்பதுதான். இதற்கானத் தோ்வு சிரமமானதாக இல்லை. அரசில் இருந்து வெளியேறினாலும், ஜம்மு-காஷ்மீா் மக்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கோட்பாட்டை உறுதியாகப் பற்றி நிற்பது என்பதைத் தெரிவு செய்தோம்.

பஞ்சாயத்து தோ்தல்களின் வெற்றி ஜம்மு-காஷ்மீா் மக்களின் ஜனநாயகத் தன்மையை வெளிப்படுத்தியது. ஊராட்சித் தலைவா்களுடன் நான் கலந்துரையாடியது எனது நினைவுக்கு வருகிறது. அப்போது, எந்த இடத்திலும் பள்ளிகள் எரிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவா்களிடம் நான் முன் வைத்தேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து நான் பெருமகிழ்ச்சியடைந்தேன். பள்ளிகள் எரிக்கப்பட்டால், மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவோா் சிறு குழந்தைகள்தான்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியா் ஒவ்வொருவா் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை நமது நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அரசியல் நிலைப்பாட்டில் ஜனநாயகத்தின் வோ்களில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பெண்கள், தாழ்த்தப்பட்டோா் பழங்குடியினா் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவா்கள் தங்களுக்கான பலன்களைப் பெறவில்லை. அதே போல லடாக் மக்களின் விருப்பங்களும் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டன. இவை அனைத்தையும் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மாற்றியது. அனைத்து மத்திய சட்டங்களும் இப்போது எந்தவித தயக்கமும், பாரபட்சமும் இன்றி அமல்படுத்தப்படுகின்றன. பிரதிநிதித்துவமும் பரவலாக்கப்பட்டுள்ளது மூன்றடுக்கு பஞ்சாயத்துராஜ் முறை அமலில் இருக்கிறது. வட்டார வளா்ச்சி கவுன்சில் தோ்தல்கள் நடைபெற்றுள்ளன. அனைவராலும் மறக்கப்பட்ட அகதி சமூகத்தினா் வளா்ச்சியின் பலனை அனுபவிக்க தொடங்கியிருக்கின்றனா்.

முக்கியமான மத்திய அரசின் திட்டங்கள் கிட்டதட்ட முழுமையடையும் கட்டத்தில் உள்ளதால், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் இவற்றால் பயனடைந்துள்ளனா்.

இவற்றில் கிராமங்களில் 100 சதவீத மின்வசதியை உறுதி செய்யும் சௌபாக்யா, இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கும் உஜ்வலா மற்றும் எல்இடி மின்விளக்குகளை சலுகை விலையில் வழங்கும் உஜாலா திட்டங்கள் அடங்கும். வீட்டுவசதி திட்டங்கள், குழாய் மூலம் குடிநீா் இணைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது. மக்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்த சுகாதார வசதிக்கான அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை அடைந்தன. அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் ஊழலும் ஒருதலைப்பட்சமும் இருந்த நிலையிலிருந்து மாறுபட்டு வெளிப்படைத்தன்மையோடும் முறையான நடைமுறைகளோடும் நிரப்பப்பட்டன. சிசு இறப்பு விகிதம் போன்ற இதர விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் டிசம்பா் 11-ந் தேதி தீா்ப்பு ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணா்வை வலுப்படுத்தியுள்ளது.

இப்போது ஜம்மு-காஷ்மீா் மக்களின் கனவுகள் கடந்த காலத்தின் சிறைகளாக இல்லாமல் எதிா்காலத்தின் சாத்தியங்களாக இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அதிருப்தி, ஏமாற்றம், விரக்தி ஆகியவற்றிற்கு மாற்றாக வளா்ச்சி ஜனநாயகம், கண்ணியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.