;
Athirady Tamil News

நான்கு பாதாள குழு உறுப்பினர்கள் கைக்குண்டுகளுடன் கைது

0

டுபாயைத் தளமாகக் கொண்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் தகவலின் பேரில், தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ வெளியேறும் பகுதிக்கு அருகில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மற்றும் கிட்டத்தட்ட ஐம்பது கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரைக் கொலை செய்யும் நோக்குடன் மீகொட பிரதேசத்துக்குச் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் உள்ள பாதாள உலக தலைவர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் இல்லை எனவும், டுபாயில் உள்ள பாதாள உலகத் தலைவரின் தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் வந்த வானின் சாரதி ஒவ்வொரு இடத்திலிருந்தும் உரிய நபர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலையை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிடவும் திட்டம் தீட்டியிருந்தமை தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.