;
Athirady Tamil News

மருதடி பிள்ளையார் கோவில் கஜமுக சூரன் போர் (Photos, Video)

0

யாழ்ப்பாணம் மருதடி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு கஜமுகா சூரன் போர் இடம் பெற்றது.

விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , விநாயக பெருமான் உள்வீதி உலா வந்து , இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி கஜமுகா சூரனை வதம் செய்தார்.

சூரன் போர் திருவிழாவில்அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.