;
Athirady Tamil News

யாழ்.திருநெல்வேலியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது

0

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் போதை பொருள் பாவனையில் சில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் , 20 , 21 மற்றும் 23 வயதுடைய மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் மாவா பாக்கு என்பவை மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.