;
Athirady Tamil News

இந்திய பல்கலை மாணவன் லண்டனில் மாயம்

0

இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் லண்டனில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், கிழக்கு லண்டனில் தங்கியிருந்த அவர் கடந்த 15 ஆம் திகதி முதல் மாயமாகியுள்ளார்.

இந்த விடயம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மக்களின் உதவி
அத்தோடு சிர்சா, காணாமல் போயுள்ள மாணவரின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த செய்தியை மக்கள் பகிர வேண்டும் என கேட்டு கொண்டதுடன், இந்திய மாணவரை பற்றி ஏதேனும் தகவல் இருக்குமென்றால் தொடர்பு கொள்ளும்படி எண்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஜி.எஸ்.பாட்டியா என்ற மாணவர் கடந்த 15 ஆம் திகதி கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் அவர் தென்பட்டுள்ளதுடன் அவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.