;
Athirady Tamil News

களனிப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

0

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் இன்று (18.12.2023) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சம்பவத்தினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக களனிப் பல்கலைக்கழகம் கடந்த (05.12.2023) ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.