;
Athirady Tamil News

உலகம் முழுவதும் உக்ரைனின் வெடிப்புச் சத்தங்கள் கேட்க வேண்டும்!

0

ரஷ்யா துருப்புக்கள் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட 6 நகரங்கள் மீதும், மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு உக்ரைன் வரையிலான பிற பகுதிகள் மீது நேற்றைய தினம் (29-12-2023) மாலை முதல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா துருப்புக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் உக்ரைன் முழுவதும் உள்ள கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பாடசாலைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை சேதமடைந்துள்ளன.

ரஷ்யாவின் எந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் மட்டுமல்லாது உலக நாடுகளும் தங்கள் எதிர்ப்புகளை வெளியுள்ளனர்.

இன்றைய வெடிப்புச் சத்தங்கள் உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.

இந்த ஒலிகளுக்கு ரஷ்யா உண்மை சொல்ல வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.