;
Athirady Tamil News

ஜப்பானில் பற்றி எரியும் விமானத்திலிருந்து மீட்கப்படும் பயணிகள் : பதற வைக்கும் காணொளி

0

ஜப்பானில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்படும் காணொளி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்த காணொளியில், தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து அவசரகால பலூன் வழியே பத்திரமாக பயணிகள் கீழே இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பயணிகள் வெளியேறும் காட்சிகள்
விமானம் கொழுந்துவிட்டு எரியும் போது, பயணிகள் அதில் இருந்து வெளியேறும் காட்சிகள் பார்க்கவே பயத்தை ஏற்படுத்துகின்றன.

பாதுகாப்பு பலூன் வழியே விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 பேர் அடங்கிய பணியாளர் குழு என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இதில் எட்டு பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஓடுபாதையில் தரையிறங்கிய பயணிகள் விமானம்
கடலோர காவல்படை விமானத்தில் மொத்தம் ஆறு பேர் இருந்த நிலையில், ஒருவர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனோடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை குறைத்துக் கொண்டே வந்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர காவல்படையின் விமானத்தின் மீது மோதியது. இதன் காரணமாக பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.