;
Athirady Tamil News

யாழ்பாணத்தில் பொலிஸாரின் திடீர் சோதனையில் இரு இளைஞர்கள் கைது

0

யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் யாழ் கோண்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை 50 ஆயிரம் ரூபா பணத்துடன் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டைச் சோதனைக்குட்படுத்தியபோது 500 கிராம் கேரளக் கஞ்சா, 100 கிராம் ஹெரோய்ன், ஆறு போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் என்பன மீட்கப்பட்டன என்றும் அதேவேளை அங்கிருந்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

24 மற்றும் 21 வயதான இருவரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர், என்பதோடு போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபடுவர் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.