;
Athirady Tamil News

வீட்டின் பதுங்கு குழியில் கட்டுக்கட்டாய் பண நோட்டுகள்: தென்னிலங்கையில் பொலிஸார் அதிரடி சோதனை

0

தென்னிலங்கையின் கம்பஹாவில் உள்ள வீடு ஒன்றின் பதுங்கு குழியில் இருந்து பொலிஸார் 22 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

பதுங்கு குழியில் பணம்
வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்து வரும் பட்டா மஞ்சுவின் நெருங்கிய உறவினர் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த பெண்ணின் கைபேசியை கைப்பற்றி சோதனையிட்டதில், வீட்டில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனால் வீட்டை முழுவதுமாக சோதனையிட்ட பொலிஸார் வீட்டில் இருந்த பதுங்கு குழியை கண்டுபிடித்தனர்.

அத்துடன் அந்த பதுங்கு குழியில் இருந்து ரூ. 22 லட்சத்திற்கும் அதிகமான பண நோட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

29 வயது பெண் கைது
இதில் சம்பந்தப்பட்ட கெஹெல்பெத்தர பகுதியை சேர்ந்த 29 வயது பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் வீரகுள பொலிஸ் நிலையத்தில் பட்டா மஞ்சு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.