;
Athirady Tamil News

பருத்தித்துறையில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மறுநாள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை நேற்றைய தினம் திங்கட்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , 10 கடற்தொழிலாளர்களும் மன்றில் முற்படுத்தப்பட்ட போது. , அவர்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து 09 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.