;
Athirady Tamil News

இளவாலையில் ஹெரோயினுடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது இருவரிடம் இருந்தும் , தலா 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து இருவரையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.