;
Athirady Tamil News

போராட்டத்தில் கலந்து கொண்ட முஜிபுர் ரஹ்மானுக்கு திடீர் சுகயீனம்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு போராட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்ர் கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை பிரயோகத்தினால் சுவாசப் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.