;
Athirady Tamil News

பெண்கள் மீதான தவறான செயற்பாடு: நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

0

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பெண்கள் மீதான தவறான செயற்பாடு தொடர்பான குற்றச்சாட்டில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (30.01.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு பெண்கள்
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் கனிஷ்ட ஊழியர்களான இரு பெண்களை தவறான செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின் குறித்த சம்பவத்துடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் மூன்று சிற்றூழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.