;
Athirady Tamil News

மின்சார பாவனையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0

எதிர்வரும் காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (31-01-2024) மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தனது X கணக்கில் ஒரு பதிவையிட்டுள்ள அமைச்சர், எதிர்காலத்தில் மின்சார நுகர்வோருக்கு மேலும் சில சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.